ரூ. 50-க்கு 12 மருத்துவ பரிசோதனை; உடனே ரிசல்ட்: தீவுத்திடல் கண்காட்சியில் அசத்தும் சுகாதாரத்துறை!

 

ரூ. 50-க்கு 12 மருத்துவ பரிசோதனை; உடனே ரிசல்ட்:  தீவுத்திடல் கண்காட்சியில் அசத்தும் சுகாதாரத்துறை!

சுகாதாரத்துறை போன்ற  அரசு சார்ந்த துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

சென்னை தீவுத்திடலில் 46வது சுற்றுலா கண்காட்சி சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை, தீயணைப்புத் துறை, ரயில்வே, சுகாதாரத்துறை போன்ற  அரசு சார்ந்த பல துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில்  சுகாதாரத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில், மருத்துவக் கல்வி, தொழு நோய், காச நோய், புகையிலை தடுப்பு, பாரம்பரிய மருத்துவம் குறித்த விழிப்புணர்வும், அம்மா முழு உடல் பரிசோதனை  மையமும் செயல்பட்டு வருகிறது. 

ttn

இதில் ரூ. 50க்கு 12 மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உடனடியாக அதற்கான முடிவுகளும், உரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அதனால் குறைந்த செலவில் மக்கள் இந்த மருத்துவ பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம். அவற்றில் சில பின்வருமாறு;-

உடல் வெப்ப நிலை

இரத்த அழுத்தம் 

இதய துடிப்பு

உடல் பருமன்

இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு

எடை, உயரம், உடல் பருமன் குறியீடு

ரத்த அணுக்கள் எண்ணிக்கை

சர்க்கரை அளவு

பார்வை திறன்