ரூ.479 விலையில் புதிய ப்ரீபெய்டு பிளானை அறிமுகம் செய்தது வோடபோன்

 

ரூ.479 விலையில் புதிய ப்ரீபெய்டு பிளானை அறிமுகம் செய்தது வோடபோன்

வோடபோன் நிறுவனம் ரூ.479 விலையில் புதிய ப்ரீபெய்டு பிளானை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: வோடபோன் நிறுவனம் ரூ.479 விலையில் புதிய ப்ரீபெய்டு பிளானை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் நிறுவனம் ரூ.479 விலையில் புதிய ப்ரீபெய்டு பிளானை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.6 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ், வோடபோன் ப்ளே ஆப் சந்தா ஆகியவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. எனவே இந்த பிளான் மூலம் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 134.4 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த புதிய ரீசார்ஜ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. வோடபோன் அறிவித்திருக்கும் இந்த புதிய ரீசார்ஜ் சலுகை ஜியோவின் ரூ.399 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ வழங்கும் பிளானில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.