ரூ.40000 சம்பளத்தில் 8000 பேருக்கு வேலை வாய்ப்பு! எல்.ஐ.சி நிறுவனம் அறிவிப்பு!

 

ரூ.40000 சம்பளத்தில் 8000 பேருக்கு வேலை வாய்ப்பு! எல்.ஐ.சி நிறுவனம் அறிவிப்பு!

மத்திய அரசின் எல்.ஐ.சி. நிறுவனத்தில் ரூ.40,000 சம்பளத்தில் 8,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், அந்த 8,000 க்கும் அதிகமான காலி பணியிடங்களுக்கான தேர்வையும் எல்.ஐ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விருப்பமும், தேவையான தகுதிகளையும் உடைய விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் எல்.ஐ.சி. நிறுவனத்தில் ரூ.40,000 சம்பளத்தில் 8,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், அந்த 8,000 க்கும் அதிகமான காலி பணியிடங்களுக்கான தேர்வையும் எல்.ஐ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விருப்பமும், தேவையான தகுதிகளையும் உடைய விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம். எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான இந்த தேர்வை எழுத ஆன்லைன்  மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 01.10.2019.

lic

விண்ணப்பதாரர்கள், விரும்பிய இடங்களில் தேர்வுகளை எழுதலாம். இதற்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் மாதம் 21 மற்றும் 22ம் தேதி நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு நடைப்பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதற்கான வயது வரம்பு குறைந்தபட்சமாக 18 வயதுகளும், அதிகபட்சமாக 1.9.2019ம் தேதிக்குள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது பிரிவினருக்கு தேர்வு கட்டணமாக ரூ.510 உடன் ஜிஎஸ்டியும், எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் – ரூ.85 உடன் ஜி.எஸ்.டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள விகிதம்  ரூ.14,435 முதல் 40,080 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை, licindia.in என்ற அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும்ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.