ரூ.4.55 லட்சம் கோடியை அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்…….உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,411 புள்ளிகள் உயர்வு…

 

ரூ.4.55 லட்சம் கோடியை அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்…….உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,411 புள்ளிகள் உயர்வு…

இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 1,411 புள்ளிகள் உயர்ந்தது.

கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை ஏழை மக்கள் எதிர்கொள்ளும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

நிர்மலா சீதாராமன்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் இண்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், எல் அண்டு டி, பஜாஜ் பைனான்ஸ், கோடக்மகிந்திரா வங்கி, பஜாஜ் ஆட்டோ மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்பார்மா, டெக்மகிந்திரா மற்றும் மாருதி ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,508 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 769 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 172 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.113.03 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.55 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,410.99 புள்ளிகள் உயர்ந்து 29,946.77 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 323.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8,641.45 புள்ளிகளில் நிலைகொண்டது.