ரூ. 2,800 கோடி சொத்தை பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்த அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன் தனது ரூ. 2 ஆயிரத்து 800 கோடி சொத்துகளை அவரது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார்.
மும்பை: அமிதாப்பச்சன் தனது ரூ. 2,800 கோடி சொத்துகளை அவரது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார்.
பாலிவுட்டின் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன். நடிப்பது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள், பல்வேறு விளம்பரப்படங்கள் போன்று எப்போதும் பிஸியாக உள்ளார். 76 வயதாகும் இவருக்கு தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் கல்லீரலில் 75 சதவீதம் போய்விட்டது. மீதமுள்ள 25 சதவீதத்தை வைத்து தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
இந்த நிலையில் இவருக்கு ரூ. 2 ஆயிரத்து 800 கோடி சொத்துக்கள் உள்ளன. அவர் இறந்த பிறகு சொத்துக்களைச் சரிசமமாக மகள் ஸ்வேதாவுக்கும், மகன் அபிஷேக்கிற்கும் கொடுக்கும்படி உயில் எழுதி வைத்துள்ளாராம்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு மகளும், மகனும் ஒன்று தான். எப்படி தன் மகனை நினைத்துப் பெருமைப்படுகிறாரோ அதே போன்று மகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அதனால் தான் இருவருக்கும் சரிசமமாகச் சொத்துகளைப் பிரித்து கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.