ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடுடன் புதிய பிரீபெய்டு பிளானை அறிவித்தது ஏர்டெல்!

 

ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடுடன் புதிய பிரீபெய்டு பிளானை அறிவித்தது ஏர்டெல்!

ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடுடன் புதிய பிரீபெய்டு பிளானை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லி: ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடுடன் புதிய பிரீபெய்டு பிளானை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் டெலிகாம் நிறுவனங்கள் நாள்தோறும் புதுப்புது ரீசார்ஜ் பிளான்களை அறிவித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இதோ மீண்டும் ஒரு புதிய அம்சத்துடன் பிரீபெய்டு பிளானை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடுடன் ரூ.179 பிரீபெய்டு பிளானை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ரீசார்ஜ் பிளானுக்காக பார்தி ஏ.எக்ஸ்.ஏ ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 54 வயது உடைய யாரும் இந்த ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு பலன்களை பெற முடியும். இதற்கென்று தனியாக மருத்துவ பரிசோதனையோ, ஆவணங்களோ தேவையில்லை என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

airtel

தேவைப்பட்டால் இந்த ஆயுள் காப்பீடு தொடர்பான அசல் ஆவணங்களை வாடிக்கையாளர்கள் கேட்டு பெற முடியும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் ரீடெயில் ஸ்டோர் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் இந்த ரீசார்ஜ் பிளானுக்கான ஆயுள் காப்பீடு தொடர்பான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாளொன்றுக்கு 300 எஸ்.எம்.எஸ், அதிவேக இன்டர்நெட், 28 நாட்கள் வேலிடிட்டி ஆகிய அம்சங்களை தாங்கி இந்த ரூ.179 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி வின்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் ஆகிய பிளாட்பார்ம்களின் சந்தா இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 370 லைவ் டிவி சேனல்கள் மற்றும் 10,000 திரைப்படங்களை வாடிக்கையாளர்கள் பார்த்து மகிழ முடியும்.