ரூ.190 மதிப்புள்ள டிக்‌ஷ்னேரி… பள்ளி மாணவர்களுக்கு இலவசம்..!

 

ரூ.190 மதிப்புள்ள டிக்‌ஷ்னேரி… பள்ளி மாணவர்களுக்கு இலவசம்..!

பள்ளிக் கூடங்களுக்கு போகிறவர், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 190 ரூபாய் மதிப்புள்ள டிக்ஷனரிகளை இலவசமாக கொடுத்துவிட்டு வருகிறார்.

ஊர் ஊராகப் போய் டிக் ஷனரி கொடுத்து வருகிறார் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். தமிழக அரசின் சாதனைகளை மதுரை மாவட்டம் முழுவதும் நடைபயணமாக போய் விளக்கி வருகிறார்.

இந்தப் பயணத்தில் மாவட்டத்தில் இருக்கிற 10 சட்டசபை தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாக்களையும் நடத்திக் கொண்டு இருக்கிறார். அப்போது பள்ளிக் கூடங்களுக்கு போகிறவர், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 190 ரூபாய் மதிப்புள்ள டிக்ஷனரிகளை இலவசமாக கொடுத்துவிட்டு வருகிறார்.

udhayakumar

இதனால், மாணவர்களும், பெற்றோரும், அமைச்சரை பாராட்டி வருகிறார்கள்.மதுரை மாவட்டத்துக்கு மட்டுந்தானா இந்த டிக்ஷ்னேரி.. தமிழகத்திற்கே அமைச்சர் தானே அவர், அதென்ன மதுரை மாவட்டத்துக்கு மட்டும் தனிச் சலுகை எனக் கேட்கிறார்கள் பக்கத்து மாவட்ட மக்கள்.