ரூ.169 விலையில் தினமும் 1 ஜிபி டேட்டா…ஏர்டெல் புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

 

ரூ.169 விலையில் தினமும் 1 ஜிபி டேட்டா…ஏர்டெல் புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

ஏர்டெல் நிறுவனம் ரூ.169 விலையில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கக் கூடிய புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மும்பை: ஏர்டெல் நிறுவனம் ரூ.169 விலையில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கக் கூடிய புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.169 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதாவது இந்த பிளானில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 28 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த புதிய சலுகை நாடு முழுக்க ஏர்டெல் பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தி வரும் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் நிறுவனமும் ரூ.169 விலையில் ரீசார்ஜ் பிளான் அறிமுகம் செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் ஏர்டெல் வழங்கும் அதே நன்மைகளையே வழங்குகிறது.

மேலும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் ரூ.169 பிளான் சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது. ஜியோவில் பிளானில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.