ரூ.10-க்கு சேலை; அலை மோதிய பெண்கள் கூட்டம்; பலர் காயம்
சலுகை விலையில் புடவை வாங்க பெண்கள் கூட்டம் அலை மோதியதால், பலர் காயமடைந்த சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது
ஹைதராபாத்: சலுகை விலையில் புடவை வாங்க பெண்கள் கூட்டம் அலை மோதியதால், பலர் காயமடைந்த சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.
ஹைதராபாத் சித்திபேட் பகுதியில் உள்ள ஷாப்பிங் மஹாலில் ஒரு புடவையின் விலை ரூ.10 என சலுகை விலையில் விற்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதனை கேள்வி பட்ட பெண்கள் கூட்டம் கூட்டமாக அங்கு சென்றனர்.
ஒரே சமயத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயங்கி விழுந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதனிடையே, பெண்களிடம் இருந்த பணம், தங்க நகைகளை திருடி, தங்கள் பங்குக்கு திருடர்களும் கைவரிசையை காட்ட தொடங்கி விட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தியதுடன், காயமடைந்த பெண்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். திருடு போன பொருட்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை ரூ.10-மேற்கொண்டு வருகின்றனர்.