ரூ.10 கோடி கடன்.. நடிகர் கமல் மீது நடிகர் சூர்யாவின் உறவினர் பரபரப்பு புகார்!

 

ரூ.10 கோடி கடன்..  நடிகர் கமல் மீது நடிகர் சூர்யாவின் உறவினர் பரபரப்பு புகார்!

நடிகர் கமல் தனது படக் கம்பெனிக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி ரூபாய் 10 கோடி வாங்கியிருந்ததாகவும், கமல்ஹாசன் சொன்னபடி இதுவரையில் நடித்துக் கொடுக்கவுமில்லை, பணத்தையும் திரும்பத் தரவில்லை என்று பிரபல தயாரிப்பாளரும், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரின் உறவினருமான ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். 

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட  ஆரம்பித்த பிறகு, அரசியலில் ஈடுபட்டிருப்பதால், தனது நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக ‘இந்தியன் -2’ இருக்கும். இனி அரசியலில் தான் கவனம் செலுத்தப் போகிறேன் எனக் கூறியிருந்தார்.  

Kamal haasan

இந்நிலையில், நடிகர் கமல் தனது படக் கம்பெனிக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி ரூபாய் 10 கோடி வாங்கியிருந்ததாகவும், கமல்ஹாசன் சொன்னபடி இதுவரையில் நடித்துக் கொடுக்கவுமில்லை, பணத்தையும் திரும்பத் தரவில்லை என்று பிரபல தயாரிப்பாளரும், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரின் உறவினருமான ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். 

Gnanavel raja

இது குறித்து ஞானவேல்ராஜா அளித்திருக்கும் புகாரில், கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறினார். படத்தில் நடிப்பதற்காக சம்பளத்தில் முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில், பணம் பெற்று நான்கு ஆண்டுகள் வரையில் ஆகிவிட்ட நிலையில், இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

Kamal haasan

நடிகர் கமல்ஹாசன் மீது நடிகர் சூர்யாவின் நெருங்கிய உறவினரான ஞானவேல் ராஜா சங்கத்தில் கொடுத்திருக்கும் இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், அரசின் கல்வி முறைக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் நடிகர் சூர்யா தெரிவித்திருந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய போது, அவருக்கு கமல் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.