ரூம் போடப்போன இளம்பெண் கதறல்… உக்கிரத்தில் மோடியின் விசுவாசிகள்..!

 

ரூம் போடப்போன இளம்பெண் கதறல்… உக்கிரத்தில் மோடியின் விசுவாசிகள்..!

கிறிஸ்துவ இளம் பெண் ஒருவர் லாட்ஜில் தங்குவதற்கு ரூம் போட சென்றுள்ளார். அப்போது அங்கு உள்ளவர்கள் அடையாள அட்டை கேட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மோடி எதிர்ப்பு கண்மூடி தனமாக உள்ளதாக பாஜகவினர் பலமுறை குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக என்ன காரணம் என்று கூட தெரியாமல் மோடியை விமர்சனம் செய்வதாகவும், எதற்கெடுத்தாலும் மோடியின் மீது பலியை போட்டு பலர் அரசியல் செய்வதாக பாஜக முக்கிய தலைவர்கள் கூறிவந்தனர்.modi

இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேளாங்கண்ணி சென்றுள்ள கிறிஸ்துவ இளம் பெண் ஒருவர் லாட்ஜில் தங்குவதற்கு ரூம் போட சென்றுள்ளார். அப்போது அங்கு உள்ளவர்கள் அடையாள அட்டை கேட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தச்ப்பெண்கள் எந்த அடையாள அட்டையையும் வைத்திருக்கவில்லை. modiஇதனால் ரூம் போடமுடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஒரு பெண் ‘’ஏண்டா  மோடி இது என்ன புது சட்டம். நீ வெற்றிபெற்று இரண்டு நாள்தானே ஆகிறது. அதுக்குள்ள உன் வேலையை காண்பிச்சிட்டியே’’ என்று ஒருமையில் பேசியுள்ளார்.Modi

எங்கு ரூம் புக் செய்ய சென்றாலும் ஏதேனும் ஒரு அடையாள அட்டை தேவை. அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களில் இளம்பெண்கள் ரூம் எடுத்து கங்கி தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆகையால் அந்தப்பகுதிகளில் அடையாள அட்டையை காட்டாமல் விடுதி நிர்வாகிகள் ரூம் தருவதில் சலுகைகள் தருவதில்லை.   இந்த நடைமுறைகளை அறிந்து கொள்ளாமல்  மோடியை ஒருமையில் பேசியுள்ளார் அந்தப்பெண்.  இதனால் அந்த இளம்பெண் மீது ஆத்திரத்தில் உள்ளனர் மோடி விசுவாசிகள்.  தமிழச்சி அக்கா தமிழகத்தில் தாமரை வளந்தா மாதிரிதான்.