ரீலில் ஜோடி சேர்ந்த பிக் பாஸ் யாஷிகா-மகத்!

 

ரீலில் ஜோடி சேர்ந்த பிக் பாஸ் யாஷிகா-மகத்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நெருக்கமாக பேசப்பட்ட நடிகை யாஷிகா மற்றும் மகத் இருவரும் பேய் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நெருக்கமாக பேசப்பட்ட நடிகை யாஷிகா மற்றும் மகத் இருவரும் பேய் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மக்களின் கவனம் ஈர்த்தார். வலிமையான போட்டியாளராக கருதப்பட்ட யாஷிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மகத் மீது காதல் வயப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.

நடிகர் மகத் ராகவேந்திராவுக்கு ஏற்கனவே காதலி இருக்கும் நிலையில், யாஷிகாவை தானும் காதலித்ததாக மகத் ஒப்புக் கொண்டார். ஒரு மாதிரியாக இவர்களது காதல் கதை போய்க் கொண்டிருந்த நேரத்தில் மும்தாஜை டார்கெட் செய்து மகத் அடித்த லூட்டியால் மக்கள் ரெட் கார்ட் வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

mahat

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு காதல் எல்லாம் இல்லை, இருவரும் நண்பர்கள் தான் என கூறிவிட்டு இருவரும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். மகத் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து, யாஷிகா மற்றும் மகத் ஜோடி சேர்ந்து புதிய பேய் பட ஒன்றில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜையுடன் இன்று தொடங்கியதையடுத்து, ஜனவரியில் ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது. மகேஷ்-வெங்கடேஷ் என சகோதரர்கள் இணைந்து இயக்கவுள்ளனர். பேய் படம் என்றாலும் சமூக பிரச்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முனீஸ்காந்த், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

ஏற்கனவே பிக் பாஸ் ஜோடியான ஹரிஷ் கல்யாண்-ரைசா வில்சன் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில், யாஷிகா-மகத் நடிக்கும் காதல் திரைப்படமும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.