ரியோவின் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் எப்படி இருக்கு?: பொது மக்கள் கருத்து!

 

ரியோவின் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் எப்படி இருக்கு?: பொது மக்கள் கருத்து!

நடிகர் ரியோ நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

சென்னை: நடிகர் ரியோ நடிப்பில் வெளியாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

‘கனா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. யூடியூபில் பிரபலமான பிளாக் ஷீப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். 

மேலும், ஷிரின் காஞ்வாலா, ராதா ரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கருத்துக்களையே கூறி வருகின்றனர். ஆகையால் கனா படத்தைப் போல இந்த படமும் வசூலில் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்றே எதிர்ப்பாக்கப்படுகிறது. 

இந்த நிலையில் படம் குறித்து பொது மக்கள் கூறிய கருத்துக்களைக் கீழே பார்க்கலாம்…