ராமேஸ்வர மீனவர்களை தாக்கிய இந்திய கடலோர காவல் படை!!!

 

ராமேஸ்வர மீனவர்களை தாக்கிய இந்திய கடலோர காவல் படை!!!

மீனவர்கள் மீன்பிடித்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போது தனுஷ்கோடியில் ராமேஸ்வர மீனவர்களை இந்திய கடலோர காவல் படை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

மீனவர்கள் மீன்பிடித்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போது தனுஷ்கோடியில் ராமேஸ்வர மீனவர்களை இந்திய கடலோர காவல் படை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

மீனவர்கள் கச்சத்தீவு பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை காவல் படை ராமேஸ்வர மீனவர்களின் மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு அவர்களை விரட்டி அடித்துள்ளனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய ராமேஸ்வர மீனவர்களை தனுஷ்கோடி பகுதியில், ஏன் எல்லை மீறுகிறீர்கள் என்று ஹிந்தியில் கூறி கயிற்றால் அடித்து துன்புறுத்தியதாக ராமேஸ்வர மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.