ராமசாமி படையாட்சியாரின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்

 

ராமசாமி படையாட்சியாரின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்

ராமசாமி படையாட்சியாருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே ராமசாமி படையாட்சியாரின் வெண்கல சிலையும் ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 

silai

அந்த மணிமண்டபத்தை இன்று மாலை 12.15 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வீரமணி, எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

mandabam