ராதிகா சரத்குமார் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்த விஷால்…பதவி படுத்தும் பாடு…

 

ராதிகா சரத்குமார் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்த விஷால்…பதவி படுத்தும் பாடு…

வரும் நடிகர் சங்கத் தேர்தலில் தன்னை எதிர்த்து ராதிகா சரத்குமாரை நிறுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதை அறிந்த நடிகர் விஷால் தம்பதி சமேதராக அவர்களைச் சந்தித்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

வரும் நடிகர் சங்கத் தேர்தலில் தன்னை எதிர்த்து ராதிகா சரத்குமாரை நிறுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதை அறிந்த நடிகர் விஷால் தம்பதி சமேதராக அவர்களைச் சந்தித்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக களமிறங்கி வெற்றி பெற்றவர் நடிகர் விஷால். தேர்தல் சமயத்தில் இருந்தே சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பாகவும் இருவருக்கு இடையே பிரச்சினை உள்ளது. இதை காரணமாக வைத்து தான், சரத்குமாரையும், ராதாரவியையும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினார் இவர் தலைமையிலான பாண்டவர் அணி கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடித்து, நடிகர் சங்கக் கட்டடத்தை கட்டி வருகிறது. ஆனால் கட்டிடப்பணிகள் அவர்கள் வாக்களித்த காலகட்டத்துக்குள் முடிவடையாதது மட்டுமின்றி இன்னும் பெரும்  தொகை வேண்டி நிற்கிறது.

இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு அடுத்த தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் இத்தேர்தலில் விஷால் போட்டியிடக்கூடாது. ஏனெனில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள அவர் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என ஒரு குரூப் அவருக்கு எதிராக மிகத் தீவிரமாக வேலை செய்துவருகிறது. ஆனால் விஷால் நடிகர் சங்கக் கட்டிடம் முற்றுப்பெறாத நிலையில் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு கட்டிடத்தை முடிக்கவிரும்புகிறார்.

அவருக்கு எதிராக இறங்கியுள்ளவர்கள் இத்தேர்தலில் ராதிகா சரத்குமாரை நிறுத்தினால் அவர் நிச்சயம் வெல்வார் என்று காய் நகர்த்திக்கொண்டிருந்த நிலையில் அவர்களைத் தாஜா செய்து வாபஸ் வாங்க வைக்க விரும்பிய விஷால் சென்னை கடலோரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் சரத்குமார், ராதிகாஆகிய இருவரையும் மதிய உணவு வேளையில் சந்தித்து விருந்து சாப்பிட்டதாகவும் அதன்பின் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். ராதிகா பின்வாங்குவாரா, சரத் பழைய பகையை மறப்பாரா என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.