ராதா ரவியின் சர்ச்சை பேச்சு: மௌனம் கலைத்த நயன்தாரா! முதலில் நன்றி சொன்னது இவருக்கு தான்!
நடிகை நயன்தாரா தன்னை பற்றி இழிவாக பேசிய ராதா ரவியை கண்டித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை: நடிகை நயன்தாரா தன்னை பற்றி இழிவாக பேசிய ராதா ரவியை கண்டித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசியதாவது, ‘நயன்தாரவை பற்றி வராதே செய்தியே இல்லை. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார்.அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள், பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள்’ என்று ஆபாசமாகப் பேசினார்.
நடிகர் ராதா ரவியின் சர்ச்சை கருத்துக்கு திரைத்துறை தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை கண்டனம் தெரிவித்த நிலையில், நயன்தாரா இன்னும் ஏன் மௌனமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு இருந்த வேளையில், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியதாவது, ‘தன்னை பற்றி இழிவாக பேசிய ராதா ரவியைக் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாகப் பேசி பிரபலமடையும் ராதா ரவியை விசாரிக்கக் குழு அமைக்க வேண்டும். மூத்த நடிகரான ராதா ரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னை இழிவாக பேசிய ராதா ரவியை கண்டித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்#Nayanthara #RadhaRavi pic.twitter.com/fn13HqDFe9
— toptamilnews (@toptamilnews) March 25, 2019
தொடர்ந்து அந்த பதிவில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பெண்கள் புகார்கள் குறித்து விசாரிக்க விசாகா கமிட்டி அமைப்பீர்களா? கடைசியாக இந்த சூழலிலும் என் பக்கம் நின்று பேசிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராதா ரவியின் சர்ச்சை பேச்சு:கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம்