ராதா ரவிதான் நடிகர் சங்க குளறுபடிக்கு காரணம்- நடிகர் பூச்சி முருகன்! 

 

ராதா ரவிதான் நடிகர் சங்க குளறுபடிக்கு காரணம்- நடிகர் பூச்சி முருகன்! 

நடிகர் சங்கத்தில் ராதாரவி இருந்த பதவிகாலத்திலிருந்தே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக நடிகர் பூச்சி முருகன் தெரிவித்துள்ளார். 

நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டது தொடர்பாக நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நடிகர் மனோபாலா,நடிகர் நாசர்,நடிகர் கார்த்தி,மற்றும் பூச்சி முருகன்,நடிகை சச்சு ஆகியோர் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

poochi murugan

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பூச்சி முருகன், “அரசிற்கு பல்வேறு பொறுப்புகள் இருக்கிறது. அதற்கு மத்தியில் நடிகர் சங்கத்தைப் பார்ப்பது கடினமான ஒன்று. அதிகாரிகளை நியமித்துதான் பார்க்க வேண்டும். இது இப்படியே சென்றால் நல்லது அல்ல. நடிகர் சங்கத்தை காப்பற்ற வேண்டும்.  சிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றம் செல்ல உள்ளோம். 4 பேர் கொடுத்த புகாரின் பேரில் 3,000 பேர் கொண்ட சங்கத்திற்கு எதிராக அதிகாரியை நியமித்துள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.