ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது

 

ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது

ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது

ஸ்ரீஹரிகோட்டா: ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன ஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக் கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

ஜிசாட்-7ஏ செயற்கைக் கோளில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படுகிறது. க்யூ பேண்ட் பயனாளர்களின் தொலைத்தொடர்புக்கு உதவக்கூடிய இதனை இந்திய ராணுவத்துக்கு இஸ்ரோ அர்ப்பணிக்க உள்ளது.

ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பது மற்றும் போர்க்காலங்களில் வான்வழி தாக்குதல் பணிகளுக்கு இந்த செயற்கைக் கோள் பெரிதும் பயன்படும். இந்திய ரேடார் கட்டுப்பாட்டு மையங்களுக்கு விமானங்களின் இருப்பிடத்தையும் இது துல்லியமாகக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.