ராணுவம் மோடியின் சொந்த சொத்து அல்ல – விளாசித் தள்ளும் எம்.பி., டி.ராஜா

 

ராணுவம் மோடியின் சொந்த சொத்து அல்ல – விளாசித் தள்ளும் எம்.பி., டி.ராஜா

எந்த காவலாளி மல்லையாவையும், நீரவ் மோடியையும் தப்பிக்க விடுவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த காவலாளி மல்லையாவையும், நீரவ் மோடியையும் தப்பிக்க விடுவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள விரிவான பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசிய பல விவகாரங்களின் தொகுப்பை இக்கட்டுரையில் காணலாம்.

2019 தேர்தல் முக்கியமானது

தற்போது நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் மிக மிக முக்கியமான ஒன்று. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் மோடியின் ஆட்சியில் குடிமக்கள் ஏராளாமான துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு சர்வாதிகார ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் கூட்டங்களுடன் இணைந்து நடத்தும் சம்பவங்களே காரணம். இவர்களால் நாட்டில் ஜனநாயகம் ஆட்டம் கண்டுள்ளது. மக்கள் பெரும் அபாயத்தில் இருக்கின்றனர்.

d.raja

இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான சமத்துவம், சகோதரத்துவம் என அனைத்துமே மோடி அரசால் பாதிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் என்பது யாருக்குமே இல்லை. பொருளாதாரம் பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது.

மோடி தான் காவலாளியா ?

தற்போது ‘மக்கள் காவலாளி’ என்று பொருள் தரும் ‘சௌகித்தார்’ என்ற சொல்லை பாஜக பிரமுகர்கள் தங்கள் பெயரின் முன்னாள் சேர்த்துக் கொண்டுள்ளனர்.  மோடி அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் மட்டும் தான் காவலாளி. மக்களுக்கு அல்ல. எந்த காவலாளி மல்லையாவையும், நீரவ் மோடியையும் நாட்டை கொள்ளையடிக்க அனுமதிப்பார்?

modi

இப்போது தேர்தல் நேரத்தில், சுய லாபத்திற்காக ராணுவத்தையும், விமானப்படையையும் மோடி பயன்படுத்தி வருகிறார். அது இந்திய ராணுவம், இந்திய விமானப்படை தானே தவிர மோடி ராணுவம், மோடி விமானப்படை அல்ல.

இவ்வாறு டி. ராஜா தெரிவித்துள்ளார்.