ராஜீவ்காந்தி நினைவிடத்தில் டிக் டாக் : வருத்தம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி!

 

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் டிக் டாக் : வருத்தம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி!

அக்கட்சியின் தலைவர் சீமான் பேசிய உரை ஒன்றுக்கு டிக் டாக் செய்து அதனை இணைய தளத்தில் வெளியிட்டார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குச் சென்ற நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், அக்கட்சியின் தலைவர் சீமான் பேசிய உரை ஒன்றுக்கு டிக் டாக் செய்து அதனை இணைய தளத்தில் வெளியிட்டார். 

ttn

அந்த வீடியோ வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் நின்று கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் டிக் டாக் செய்ததற்காக அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
 

ttn

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன்  அந்த வீடியோவிற்காக வருத்தம் தெரிவித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் டிக் டாக் செய்து வெளியிட்ட அந்த வீடியோவிற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், சர்ச்சையைக் கிளப்பிய கிளப்பிய அந்த வீடியோவை வெளியிட்ட 1 மணி நேரத்திலேயே தனது டிக் டாக் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டேன் என்றும் கூறியுள்ளார்.