ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பொது வார்டில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு

 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பொது வார்டில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு

அயனாவரத்தில் தவறி கீழே விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர். திருமணம் செய்து கொள்ளாத இவர் எப்போதும் குடித்துவிட்டு அயனாவரம் பகுதியில் சுற்றிதிரிவார். கடந்த 14 ஆம் தேதி அயனாவரம் சபாபதி தெரு அருகே குடித்துவிட்டு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது கால் தவறி கீழே விழுந்தார்.

coronavirus

இதனால் தலையில் காயமடைந்த முதியவரை அருகிலிருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடந்த 8 நாட்களாக பொதுவார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என அவரது ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். பரிசோதனையில் இறந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.