‘ ராஜீவ்காந்தியை கொன்னது நாங்க தான்டா’ : சர்ச்சை பேச்சால் சீமான் மீது வழக்குப்பதிவு!
சீமானை தேசத்துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது
ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது நியாயமானது என்பது போல சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ராஜிவ்காந்தியை கொன்னது நாங்க தான்டா – சீமான்..
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு.
வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு.
லூசுபய சீமான்.. #Seeman pic.twitter.com/wBDPMZO4RN— Hari Prabhakaran (@Hariindic) October 14, 2019
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையைத் தூண்டி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.