‘ராஜா ராணி’ சீரியல் சஞ்சீவ் கார்த்திக் – ஆல்யா மானஸா நிச்சயதார்த்தம்; ரசிகர்கள் வாழ்த்து!

 

‘ராஜா ராணி’ சீரியல் சஞ்சீவ் கார்த்திக் – ஆல்யா மானஸா நிச்சயதார்த்தம்; ரசிகர்கள்  வாழ்த்து!

சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

சென்னை:  சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

 ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் காதல் 

alya

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக்கை  காதலித்து வருகிறார். ராஜா ராணி சீரியலுக்காக  இவர்களுக்கு  இந்த சிறந்த சின்னதிரை ஜோடி விருது வழங்கப்பட்டுள்ளது. 

ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறியது 

alya

இந்நிலையில் சமீபகாலமாக சின்னதிரை நடிகர் நடிகைகளுக்கும் அவர்களின் நடிப்பு திறனை பாராட்டி விருது வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சின்னதிரை நடிகர்களுக்கு  விஜய் டெலிவிஷன் விருதை விஜய் தொலைக்காட்சி வழங்கி கௌரவித்தது. அதில் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ஆல்யா மானஸா தட்டி சென்றார். அப்போது இந்த விழாவிலேயே ஆல்யா மானஸா  – சஞ்சீவ் கார்த்திக் ஜோடிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  எதிர்பாராத இந்த நிகழ்வால் சஞ்சீவ் கார்த்திக் – ஆல்யா மானஸா ஜோடி ஆச்சரியத்தில் மூழ்கிப் போயுள்ளனர். 

 

இந்நிலையில் இதை உறுதிப்படுத்தியிருக்கும் சஞ்சீவ் கார்த்திக், எதிர்பாராத தருணத்தைக் கொடுத்த பப்புக் குட்டிக்கு நன்றி. மேலும் சிறந்த நடிகைக்கான விருது வாங்கியது மகிழ்ச்சியளிக்கிறது’ பதிவிட்டுள்ளார். 

நடிகை ஆல்யா மானஸாவோ, ‘இரண்டுவிதமான எதிர்பாராத சந்தோஷத்தைக் கொடுத்ததற்கு நன்றி. சிறந்த நடிகைக்கான விருது வழங்கியதோடு, சஞ்சீவ் கார்த்திக்கை நிச்சயம் செய்துகொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

முன்னதாக ஆல்யா மானஸா நடன கலைஞர் மானஸ் என்பவரைக் காதலித்து பின் கருத்து  வேறுபாடு காரணமாகப் பிரிந்தது  குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: தூங்காத என் கண்களை பார்த்து வாக்களியுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!