ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்… துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்பு

 

ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்… துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்பு

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் இன்று பதவியேற்றுக்கொண்டார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது..இதற்கிடையே ராஜஸ்தானில்  ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவை என்ற சூழலில் 99 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது. 

ஆனால் அங்கு முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்படுவாரா? இல்லை இளம் தலைவர் சச்சின் பைலட்தேர்வு செய்யப்படுவாரா? என்ற குழப்பம் நிலவி வந்தது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக 67 வயதான் மூத்த தலைவர் அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் கல்யாண் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் சச்சின் பைலட் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.