ராஜராஜ சோழனுக்கு ரெஸ்ட்… மெகா பட்ஜெட் படம் இயக்குகிறார் பா.ரஞ்சித்…

 

ராஜராஜ சோழனுக்கு ரெஸ்ட்… மெகா பட்ஜெட் படம் இயக்குகிறார் பா.ரஞ்சித்…

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு எதிராக தொண்டைத் தண்ணீர் வற்றிப்போகுமளவுக்கு முழங்கிக் கொண்டிருந்த எட்டு சாதிசன மக்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு எதிராக தொண்டைத் தண்ணீர் வற்றிப்போகுமளவுக்கு முழங்கிக் கொண்டிருந்த எட்டு சாதிசன மக்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். ராஜராஜ சோழனின் பஞ்சாயத்துகளுக்கு தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பொழப்பப் பார்க்க கிளம்புகிறார். யெஸ் அடுத்த படத்தை விரவில் அறிவிக்கிறார் பா.ரஞ்சித்.

ranjith

‘அட்டக்கத்தி’ தொடங்கி ‘காலா’ வரை சினிமாவைப்பொறுத்தவரைக்கும் ஓரளவுக்கு நல்ல மனிதராகவே தெரிந்த பா.ரஞ்சித், சமீப காலமாக மிக அதிகமான அரசியல் வம்புதும்புகளில் ஈடுபட ஆரம்பித்தார். அதில் பல பிரச்சினைகளில் அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியே ஆதரிக்க முடியாத அளவுக்கு தர்ம சங்கடங்களை உண்டாக்கினார்.

rana

தற்போது கூட இருக்கும் எந்த புண்ணியவான் சொன்ன யோசனையோ தெரியவில்லை. மிக விரைவில் ஆர்யா, சத்யராஜ், தெலுங்கு நடிகர் ராணா ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதற்கு இவர் இயக்கப்போவதாக அறிவித்த இந்திப்படமான’பிர்சா முண்டா’வின் கதை முழு வடிவம் பெறாததால் இப்படத்தை இயக்கி முடித்துவிட்டே இந்திப்பக்கம் போவார் பா.ரஞ்சித் என்கிறார்கள்.