ராஜபக்சேவை நான்  வரவேற்கவில்லை, ஆனால் அவர் முன்பு போல் இருக்க மாட்டார்: கமல் ஹாசன் அதிரடி!

 

ராஜபக்சேவை நான்  வரவேற்கவில்லை, ஆனால் அவர் முன்பு போல் இருக்க மாட்டார்: கமல் ஹாசன் அதிரடி!

இலங்கையின் பிரதமராகி உள்ள ராஜபக்சே முன்பு போல செயல்பட மாட்டார் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை : இலங்கையின் பிரதமராகி உள்ள ராஜபக்சே முன்பு போல செயல்பட மாட்டார் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ‘இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ராஜபக்சேவை நான்  வரவேற்கவில்லை. இருந்தாலும் முன்பு போல அவர் செயல்படமாட்டார் என நம்புகிறேன். மற்ற நாட்டு அரசியல் விவகாரத்தில் நாம் குறுக்கீடு செய்யக் கூடாது. இருந்தாலும் முன்பு செய்ததை தற்போதும் செய்வார்கள் என எண்ண வேண்டாம். தமிழர்களுக்கு நல்லது செய்யமாட்டார் என நாம் நினைக்கவேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

‘தமிழகத்தில் இன்னும் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிக்கப்படவில்லை.  தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.