‘ராங் கால் வந்ததற்குச் சாரி’: பாதிக்கப்பட்டவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சன்னி லியோன்!

 

‘ராங் கால் வந்ததற்குச் சாரி’: பாதிக்கப்பட்டவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சன்னி லியோன்!

நடிகை சன்னி லியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அர்ஜூன் பாட்டியாலா’.

நடிகை சன்னி லியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அர்ஜூன் பாட்டியாலா’. அதில் ஒரு குறிப்பிட்ட சீன்னில் சன்னி லியோன் ஒரு மொபைல் எண்ணைத் தரும் காட்சி உள்ளது. அது சன்னிலியோனின் மொபைல் எண் என தவறாக நினைத்து கொண்ட அவரது ரசிகர்கள் அந்த எண்ணுக்கு தினமும் தொடர்பு கொண்டு,சன்னிலியோனிடம் பேச வேண்டும் என்று நச்சரிக்கின்றார்களாம். 

இதனால் கடுப்பான அந்த வாலிபர் தனது மொபைல் எண்ணுக்குத் தினமும் நூற்றுக்கணக்கானோர் போன் செய்து சன்னிலியோன் குறித்து கேட்பதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சன்னி லியோன் பாதிக்கவைப்பவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

அவர் கூறியதாவது, ‘சாரி. உங்களுக்கு இப்படி நடக்க வேண்டும் என நினைத்து நான் இதை செய்யவில்லை. யாரோ இண்ட்ரஸ்டிங்கானவர்கள் தான் உங்களுக்கு கால் செய்கிறார்கள்’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் காவல் துறையில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.