ராகுல் தலைமையால் வெற்றி பெற்றோம் என்று சொல்லமுடியாத நிலை: ப.சிதம்பரத்தை சாடும் தமிழிசை

 

ராகுல் தலைமையால் வெற்றி பெற்றோம் என்று சொல்லமுடியாத நிலை: ப.சிதம்பரத்தை சாடும் தமிழிசை

ராகுல் தலைமையால் வெற்றி பெற்றோம் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளனர் என ப.சிதம்பரத்தின் கருத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சாடியுள்ளார்

சென்னை: ராகுல் தலைமையால் வெற்றி பெற்றோம் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளனர் என ப.சிதம்பரத்தின் கருத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சாடியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா மக்களவை தொகுதிகள் மற்றும் ராமநகரா, ஜமாகாந்தி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஷிமோகா தொகுதியை தவிர மற்ற நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது” என பதிவிட்டிருந்தார்.

இதனை சாடியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை, கர்நாடகாவில் கூட்டணியால் வெற்றி பெற்றோம் என ப.சிதம்பரம் கூறுகிறார். ராகுல் காந்தியின் தலைமையால் வெற்றி பெற்றோம் என்று சொல்லமுடியாத நிலையில் காங்கிரசும், பசிதம்பரமும் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.