ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு!

 

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிய பெரிய பிரம்மாஸ்திரம் ‘ரபேல் ஊழல்’ தான். அவர்களது பிரச்சாரம் பொதுமக்களிடம் எடுபடாமல் பிசுபிசுத்துப் போனதும், அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததும் நாடறிந்தது தான்.  பிரான்சிடமிருந்து, ‘ரபேல்’ போர் விமானம் வாங்குவதில், முறைகேடு நடந்ததாக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். 

rahul

ஒரு கட்டத்தில், பிரதமர் மோடியை, ‘திருடர்களின் தலைவன்’ எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் அப்போது கிளம்பியது. மேலும் ராகுல் காந்தி மீது, மகேஷ் ஸ்ரீஸ்ரீமால் என்பவர், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை பெருநகர நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி அக்டோபர் 3ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ எனக் கூறி ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.