ராகுல் காந்திக்கு ஆரத்தி எடுக்கும் போது நடந்த விபரீதம்

 

ராகுல் காந்திக்கு ஆரத்தி எடுக்கும் போது நடந்த விபரீதம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு ஆரத்தி எடுக்க முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போபால்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு ஆரத்தி எடுக்க முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் மாடல் சாலையில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக சாலை நெடுகிலும் கட்சி கொடிகளுடன் தொண்டர்கள் காத்திருந்தனர். அப்போது சில தொண்டர்கள் ராகுல் காந்திக்கு ஆரத்தி எடுப்பதற்காக வாகனத்தை நோக்கி சென்றனர்.

அப்பொது யாரும் எதிர்பாராதவிதமாக ஆரத்தி நெருப்பு அங்கு இருந்த வண்ண பலூன் மீது பட்டது. இதனையடுத்து அந்த பலூன் வெடித்துச் சிதறியது. ஆனால் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து ராகுல் காந்தி சற்று தள்ளி இருந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.