ராகுல் எப்படியாச்சும் பிரதமர் ஆயிடனும்! தீவிரமாக அரங்கேறும் சண்டியாகம்!! 

 

ராகுல் எப்படியாச்சும் பிரதமர் ஆயிடனும்! தீவிரமாக அரங்கேறும் சண்டியாகம்!! 

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டி சென்னை காமராஜர் அரங்கத்தில் மஹா சண்டி யாகம் நடைபெற்று வருகிறது. 

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டி சென்னை காமராஜர் அரங்கத்தில் மஹா சண்டியாகம் நடைபெற்று வருகிறது. 

rahul gandhi

தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் ஆட்சியை மீண்டும் பாஜக பிடிக்குமா அல்லது காங்கிரஸ் புதிய ஆட்சியை அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் சென்னை காமராஜர் அரங்கில் மஹா சண்டி யாகம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய யாகம் நாளை வரை நடைபெற உள்ளது. இதற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த யாகத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசு மற்றும் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பகுத்தறிவு பேசும் தி.மு.க-வை நாங்கள் யாகத்துக்கு அழைக்கவில்லை என காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. திமுகவிற்கு யாகத்தின் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் எங்களுக்கு இருக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.