ராகுலுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் அதிரடி கைது!
ராகுல் காந்திக்கு எதிராக வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட துஷார் வெல்லப்பள்ளி, கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் காந்திக்கு எதிராக வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட துஷார் வெல்லப்பள்ளி, கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணியிலிருந்த பாரத தர்மா ஜன சேனா என்ற அமைப்பின் தலைவர் துஷார் வெல்லப்பள்ளி நின்றார். இருப்பினும் இந்த தேர்தலில் ராகுல் காந்தி மாபெரும் வெற்றி பெற்றார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துஷார் வெல்லப்பள்ளி துபாயில் உள்ள உள்ள அஜ்மானில் கட்டுமான தொழில் செய்து வந்தார். 10 வருடத்துக்கு முன், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் விற்றுவிட்டார். இருப்பினும் இவர் நஸில் அப்துல்லா என்பவருக்கு ரூ.19 கோடி தரவேண்டியது இருந்துள்ளது. இதற்கான காசோலையை துஷார் அப்துல்லாவுக்குக் கொடுத்துள்ளார்.ஆனால் வாங்கி கணக்கில் பணம் இல்லாததால் அது திரும்பியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேச துஷாரும் அப்துல்லாவும் முடிவெடுத்த நிலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இது குறித்துப் பேசியுள்ளனர். இதில் உடன்பாடு எட்டாததால், அப்துல்லா அளித்த புகாரின் பேரில், துசெக் மோசடி புகாரில் துஷார் வெல்லப்பள்ளி கைதாகியுள்ளார்.