ராகவா லாரன்ஸ் கட்டித் தரப்போகும் முதல் வீடு இந்த பாட்டிக்கு தான்.. கண்கலங்க வைக்கும் வீடியோ!
டெல்டா மாவட்டங்களில் 50 வீடுகள் கட்டித் தரப்போவதாக அறிவித்திருந்த ராகவா லாரன்ஸ், முதல் வீடு யாருக்கு என்ற தகவலை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
சென்னை: டெல்டா மாவட்டங்களில் 50 வீடுகள் கட்டித் தரப்போவதாக அறிவித்திருந்த ராகவா லாரன்ஸ், முதல் வீடு யாருக்கு என்ற தகவலை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் வீட்டை இழந்த 50 பேருக்கு, வீடு கட்டித் தரப்போவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், ஒரு வயதான பாட்டி வீட்டை இழந்திருப்பது குறித்து கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ், அந்த பாட்டிக்கு வீடு கட்டித் தர முடிவு செய்து அதன்படி அந்த பாட்டியிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என ராகவா லாரன்ஸ் கேட்க, அதற்கு அந்த பாட்டி “தனக்கு எதுவும் வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு, ஒரு குடிசை மட்டும் போதும் என கூறுகிறார்”.
Hai Friends and Fans..!
My first house build for this Amma who has been affected by the gaja Puyal. pic.twitter.com/E2nPfh6cqB— Raghava Lawrence (@offl_Lawrence) November 25, 2018
இது தொடர்பான வீடியோவை தன் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ், “அந்த அம்மாவிற்கு தான் நான் கட்டித் தரப்போகும் முதல் வீடு” என தெரிவித்துள்ளார்.