ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை..

 

ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை..

நடிகர் ராகவா ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் பரத். விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தனது நண்பர்களோடு வசித்து வந்துள்ளார். இவர் சுமார் 1000 மேல் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். அதுமட்டுமின்றி மின்சார கனவுகள் என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். 

bharath

35 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மாற்றுத்திறனாளியான அவர்,இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசின் குழந்தைகள் உட்பட பல திரையுலக பிரபலங்களின் குழந்தைகளுக்கும் நடனம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு திடீரென தனது வீட்டில் பரத் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், செந்திலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, தற்கொலை குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

சினிமாவில் தன்னால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்று அடிக்கடி நண்பர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.