ரஷ்யா சென்ற தமிழரை, தமிழர்களே கும்பல் சேர்த்து பணம் பறித்த அவலம்!   

 

ரஷ்யா சென்ற தமிழரை, தமிழர்களே கும்பல் சேர்த்து பணம் பறித்த அவலம்!   

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பொறியாளர் செந்தாமரை கண்ணன். இவர் தனது தொழில்  தொடங்குவது சம்பந்தமாக சமீபத்தில் ரஷ்யாவிற்குச் சென்றுள்ளார். ரஷ்யா சென்ற இடத்தில் தனது தொழில் சம்பந்தமாக சுற்றிப் பார்க்கையில் அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த நீலகண்டன், தினகரன், தண்டாயுதபாணி மற்றும் கேரளாவை சேர்ந்த இந்த லிபின், சஜ்ஜித் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

russia

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பொறியாளர் செந்தாமரை கண்ணன். இவர் தனது தொழில்  தொடங்குவது சம்பந்தமாக சமீபத்தில் ரஷ்யாவிற்குச் சென்றுள்ளார். ரஷ்யா சென்ற இடத்தில் தனது தொழில் சம்பந்தமாக சுற்றிப் பார்க்கையில் அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த நீலகண்டன், தினகரன், தண்டாயுதபாணி மற்றும் கேரளாவை சேர்ந்த இந்த லிபின், சஜ்ஜித் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். பின் இவர்கள் அனைவரும் செந்தாமரை கண்ணனிடம் நட்பாக பழகி உள்ளனர். அனைவரும் சேர்ந்து செந்தாமரை கண்ணனுக்கு ரஷ்யாவைச் சுற்றிக் காட்டி உதவியாகவும் இருப்பது போல நடித்துள்ளனர். 

money

பிறகு, செந்தாமரை கண்ணனை ரஷ்யா மெட்ரோ ரயில் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த 4 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு மேலும் பலமாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். பின்னர் ரஷ்யாவில் முதலுதவி செய்து கொண்ட செந்தாமரை கண்ணன் சென்னை வந்தடைந்துள்ளார். அவர் தற்போது படுகாயங்களுடன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரை ஏற்றுக் கொண்டு அதன் பேரில் வழக்கு விசாரணையை தமிழக போலீசார் தொடங்கியுள்ளனர்.