ரவுடி கும்பலுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போலீஸ் அதிகாரி: அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

 

ரவுடி கும்பலுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய  போலீஸ் அதிகாரி: அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

ரவுடி கும்பலுடன்  பிறந்தநாளை கொண்டாடிய  உதவி ஆய்வாளரை விசாரிக்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்

வேலூர் : ரவுடி கும்பலுடன்  பிறந்தநாளை கொண்டாடிய  உதவி ஆய்வாளரை விசாரிக்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

gudiyatham

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கலால் பிரிவில் உதவி ஆய்வாளர் செல்வராஜ். இவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றியவர். இந்நிலையில் கடந்த மே  மாதம்  3 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாத்தில் சில காவலர்கள் உடனிருந்த நிலையில் வேலூரில் சங்கிலிப் பறிப்பு, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கருப்பு ஜெகதீஷ், ஸ்கெச் பரத், தமீம் ஆகியோரும்  கலந்து கொண்டனர். மேலும் அந்த ரவுடி கும்பல்  உதவி ஆய்வாளர் செல்வராஜூக்கு பொன்னாடை போர்த்தி கேக் வெட்டி பிறந்தநாளை  கொண்டாடியுள்ளனர். 

crime

இந்த பிறந்தநாள் கொண்டாத்தின் போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இதை கண்டு ஒட்டுமொத்த காவல்துறையும் அதிர்ச்சியில் உறைந்தது.  இது தொடர்பாக உதவி ஆய்வாளர் செல்வராஜூடம் விசாரித்து அறிக்கை அளிக்க வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ் குமாருக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.