ரவுடிகளை கட்சியில் சேர்ப்பதா..? சேலம் பிஜேபியில் குமுறல்!

 

ரவுடிகளை கட்சியில் சேர்ப்பதா..? சேலம் பிஜேபியில் குமுறல்!

சேலம் தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் முரளி! கொள்ளை ,ஆள்கடத்தல், வழிப்பறி என.சேலம் நகரில் அஸ்த்தம்பட்டி,பள்ளப்பட்டி, கண்ணங்குறிச்சி, அன்னதானப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் முரளிமீது டஜன் கணக்கில் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. 

bjb

இவைதவிர ஓமலூர்,மல்லூர் எனப் பக்கத்து நகரங்களிலும் இவர்மீது வித விதமான செக்‌ஷன்களில் வெவ்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் முரளி காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பல போஸ்டர்களை அடித்து ஒட்டினார்.அதற்குப் பிறகுதான் சேலம் போலீஸ் முரளியை 5வது முறையாக குண்டாசில் தூக்கி உள்ளே வைத்தது.

vinoj

வெளியே வந்த முரளி, வெள்ளி நகைகளை கொள்ளையடித்து விற்ற வகையில் நட்பாகி இருந்த கர்நாடக நகைகடைக்காரர்கள் கொடுத்த ஐடியாவால், அரசியலில் சேர முடிவெடுத்து திமுக,அதிமுக கதவுகளைத்தான் முதலில் தட்டினார். ஆனால் அங்கெல்லாம் முரளிக்கு வரவேற்பில்லை. அதனால் வேறு வழியில்லாத முரளி பி.ஜே.பியின் மாநில இளைஞர் அணித் தலைவர் வினோஜ் செல்வத்தை சந்தித்து, தக்க மரியாதை செய்து, தன்னை பி.ஜே.பி யில் இணைத்துக் கொண்டார். 

vinoj

ஏற்கனவே, வினோஜ் செல்வம் கட்சியின் மூத்த தலைவர்களை மதிக்காமல் நடந்து கொள்கிறார் என்று குறை பட்டுக் கொண்டிருந்தார்கள் சேலம் பி.ஜே.பி யினர். அவர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்த் விட்டது. ஒரு ஊரறிந்த ரௌடியை பி.ஜே.பியில் சேர்த்துக் கொண்டது தவறு என்று கமலாலயம் முதல் நாசிக் வரை அவர்கள் புகாரும், போர்க்கொடியுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.