ரயில் முன்பு செல்ஃபி: கல்லூரி மாணவர் பரிதாப பலி!

 

ரயில் முன்பு செல்ஃபி: கல்லூரி மாணவர் பரிதாப பலி!

ரயில் முன்பு செல்பி எடுத்த கல்லூரி மாணவர் ரயில் மோதி  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை: ரயில் முன்பு செல்பி எடுத்த கல்லூரி மாணவர் ரயில் மோதி  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல்துறை எஸ்எஸ்ஐ குமாரவேல். இவரது  மகன் மணிகண்டன். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் நேற்று பூச்சி துறை அருகே உள்ள ரயில்வே பாலத்தில் நண்பர்களுடன்  பேசிக்கொண்டிருந்தார். 

selfie

இந்நிலையில்  மானாமதுரை – மன்னார்குடி பேஸஞ்சர் ரயில் முன்பு மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் செஃல்பி எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த அவரது நண்பர் மகேந்திரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

POLICE

 இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டனின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர். மேலும்  இச்சம்பவம் குறித்து காரைக்குடி ரயில்வே போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.