ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சி சம்பவத்தின் முழு தகவல்

 

ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சி சம்பவத்தின் முழு தகவல்

கும்பகோணம் ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 2-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் கும்பகோணம் சென்றுள்ளார். கும்பகோணத்தில், இரவு சுமார் 12 மணியளவில் இறங்கிய அப்பெண், தங்கும் விடுதிக்குச் செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்துள்ளார்.

அந்த பெண்ணைத் தன் ஆட்டோவில் ஏற்றிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர், செல்ஃபோனில் சிலரிடம் பேசியதாக கூறப்படுகிறது. ஆட்டோ சிறிது தூரம் சென்றவுடன், மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் பின் தொடர்வதை அந்தப் பெண் கவனித்துள்ளார்.

ஏதோ விபரீதம் நடக்க இருப்பதை உணர்ந்த அந்தப் பெண், ஆட்டோவில் இருந்து கீழே குதித்துத் தப்பியுள்ளார். அதோடு விடாமல், நடந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வந்த கும்பகோணம் போலீசார், தினேஷ், வசந்த, புருஷோத், அன்பரசன் ஆகிய 4 பேரை இன்று கைது செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் அலுவலராகப் பயிற்சி பெற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.