ரயில் டிக்கெட் கட்டண விவகாரம்… பா.ஜ.க சால்ஜாப்பு எடுபடாது! – ப.சிதம்பரம் ட்வீட்

 

ரயில் டிக்கெட் கட்டண விவகாரம்… பா.ஜ.க சால்ஜாப்பு எடுபடாது! – ப.சிதம்பரம் ட்வீட்

புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ரயில்வே போர்டு மே 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கட்டணம் வசூலிக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் கூறுவது எடுபடாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ரயில்வே போர்டு மே 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கட்டணம் வசூலிக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் கூறுவது எடுபடாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் கசக்கி அவர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது

ரயில்வே போர்டின் மே 2ஆம் நாள் உத்தரவில் 11ஆம் பத்தி (பாரா) தெளிவாக உள்ளது. குறிப்பாக 11(c) பத்தியைப் படிக்க வேண்டும். 

பாஜக வினர் சொல்லும் சால்ஜாப்புகள் எடுபடாது. இயல்பான காலத்தில் எப்பொழுதும் இருந்த இயல்பான மானியங்களை இன்றைய விவாதத்தில் கொண்டு வருவது திசை திருப்பும் முயற்சி, அது பலிக்காது” என்று கூறியுள்ளார்.