ரயில்வே ஊழியருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் அனுமதி!!

 

ரயில்வே ஊழியருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் அனுமதி!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும், ஓமனிலிருந்து இந்தியா திரும்பிய தமிழருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இத்தாலியிலிருந்து கேரளா திரும்பிய 5 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

coronavirus

இந்நிலையில் நேபாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 59 வயதான அவர் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சொந்த ஊருக்கு சென்று ரயில் மூலம் சென்னை திரும்பிய அவருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தததால் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.