ரயிலை இயக்கிய சிங்கப்பெண்கள்!

 

ரயிலை இயக்கிய சிங்கப்பெண்கள்!

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவையிலிருந்து பெங்களூர் வரை செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் இன்று பெண்களால் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வே சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஓட்டுநர், பாதுகாப்பாளர், டிக்கெட் பரிசோதகர் என அனைவரும் மகளிரே. 

ரயிலை இயக்கிய பெண்

ரயிலை இயக்கிய பெண்கள் ரயில் புறப்படும் முன்பாக கோட்ட மேலாளர் அனைவருக்கும் மலர்ச்செண்டு கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். மேலும், கோவை மாவட்ட ரயில்வே அலுவலர்களும் இப்பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து ஊக்குவித்தனர்.