ரன்வே-யில் மளமளவென தீப்பிடித்து ஓடிய விமானம்; குழந்தைகள் உள்பட 41 பேர் பலி!

 

ரன்வே-யில் மளமளவென தீப்பிடித்து ஓடிய விமானம்; குழந்தைகள் உள்பட 41 பேர் பலி!

ஏரோஃபிளாட் விமான நிறுவனத்தை சேர்ந்த சூப்பர் ஜெட் 100 ரக விமானமானது 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 78 பேருடன் புறப்பட்டது

மாஸ்கோ: ரஷ்ய நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து  மர்மன்ஸ் எனும் நகருக்கு அந்நாட்டின் ஏரோஃபிளாட் விமான நிறுவனத்தை சேர்ந்த சூப்பர் ஜெட் 100 ரக விமானமானது 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 78 பேருடன் புறப்பட்டது.

aeroflot

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை அவசரமாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.

aeroflot

அந்த வகையில் விமானம் தரையிறங்கும் முன்பாகவே அதன் பின்புறத்தில் பற்றிய தீ மளமளவென பரவியது. ஒருவழியாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து அவசரகால வழி மூலம் 37 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.எனினும், இந்த விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான விபத்தில் 41 பேர் பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.