ரத்த வெள்ளத்தில் கர்ப்பிணி : பிணமாக தொங்கிய பேஸ்புக் காதலன்; திரைப்படத்தை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்!

 

ரத்த வெள்ளத்தில் கர்ப்பிணி : பிணமாக தொங்கிய பேஸ்புக் காதலன்; திரைப்படத்தை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்!

பேஸ்புக் காதலியை கர்ப்பமாகியதுடன் அவரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பேஸ்புக் காதலியை கர்ப்பமாகியதுடன் அவரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த திருவலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை தனது அண்ணனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.  இன்னும் திருமணமாகாத 31 வயதான அந்த பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் நெல்லையை சேர்ந்த விஜயசங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாகி பின்பு காதலாக மலர்ந்துள்ளது. ஆசிரியை விஜயசங்கரை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இதனால் அவர் இரண்டு மாதம் கருவுற்றுள்ளார். 

facebook

இதனிடையே காதலனுக்கு வேலை வாங்கி கொடுத்து வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு  அவர் விஜயசங்கரை வற்புறுத்த, நீ பல பேருடன் பேஸ்புக்கில் பழகுற.  என்கூட இருந்தமாதிரி தான் எல்லார் கூடவும் இருந்துருப்ப. அதனால் உன்ன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது’ என்று கூற அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். 

love

இதையடுத்து ஆத்திரமடைந்த விஜயசங்கர் தூங்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இருப்பினும் விஜயசங்கருடன் மல்லுக்கட்டிய அப்பெண் அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு அண்ணன்  உதவியுடன் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார்.

suicide

அப்போது  வாகன தணிக்கையிலிருந்த போலீசார் காரை வழிமறிக்கவே அவர்களிடம் உண்மையை கூறியுள்ளனர். இதை தொடர்ந்து விஜயசங்கரை  பிடிக்க அப்பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார் கதவை திறந்து பார்த்த போது  விஜயசங்கர்  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விஜயசங்கர்  குறித்து விசாரணையைத் துவங்கியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.