ரத்தன் டாட்டா காலில் விழுந்து வணங்கிய இன்போசிஸ் நிறுவனர்..நெகிழ்ச்சி சம்பவம்!

 

ரத்தன் டாட்டா காலில் விழுந்து வணங்கிய இன்போசிஸ் நிறுவனர்..நெகிழ்ச்சி சம்பவம்!

ஆண்டுதோறும் மும்பையில் நடைபெறும் டைகான் நிகழ்ச்சியில் இந்தியாவின்  முன்னணி  தொழிலதிபர்களுள் ஒருவரான ரத்தன் டாட்டாவும், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியும் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் மும்பையில் நடைபெறும் டைகான் நிகழ்ச்சியில் இந்தியாவின்  முன்னணி  தொழிலதிபர்களுள் ஒருவரான ரத்தன் டாட்டாவும், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியும் கலந்து கொண்டனர்.

ttn

அந்த நிகழ்ச்சியில் ரத்தன் டாட்டாவுக்கு  “TIEcon” எனப்படும் சர்வதேச தொழில் முனைவோருக்கான விருதை, நாராயண மூர்த்தி வழங்கினார். விருது வழங்கிய உடன் நாராயண மூர்த்தி, ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து அவரது காலை தொட்டு ஆசி பெற்றார். 

ttn

சக தொழிலதிபர் என்று கருதாமல் ரத்தன் டாட்டா தன்னை விட வயது முதிர்ந்தவர் என்பதால் நாராயண மூர்த்தி அவரின் காலில் விழுந்து வணங்கிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது  வைரல் ஆகி வருகிறது.

ttn

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரத்தன் டாட்டா, ” நாராயண மூர்த்தியின் செயல்பாடு என்னை நெகிழ வைத்து விட்டது. அவரது கையால்  “TIEcon” விருது வாங்கியது மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தை சமூக வலைத்தளங்களில் பல மக்கள் பதிவிட்டு, இரண்டு தொழிலதிபர்களையும் பாராட்டி வருகின்றனர்.