ரஜினி வீட்டில் கருப்பு ஆடு… ஆட்டத்தை தொடங்கிய சின்ன மருமகன்..!

 

ரஜினி வீட்டில் கருப்பு ஆடு… ஆட்டத்தை தொடங்கிய சின்ன மருமகன்..!

தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் ரகசியங்கள் வெளியாகி ரஜினியை டென்ஷன் ஆக்கி வருகிறது என்றால் அவர் வீட்டில் நடக்கும் விஷயங்களும் எப்படியோ வெளியாகி பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் ரகசியங்கள் வெளியாகி ரஜினியை டென்ஷன் ஆக்கி வருகிறது என்றால் அவர் வீட்டில் நடக்கும் விஷயங்களும் எப்படியோ வெளியாகி பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினி வீட்டில் இப்போது எதையும் ரகசியமாக பேசவோ… செய்யவோ முடியாது என்கிற நிலை. எதை செய்தாலும் அது உடனடியாக சமூகவலைதளங்களில் வெளியாகி விடுகிறது. இளைய மகள் சவுந்தர்யாவின் டைவர்ஸ் தொடங்கி அவரின் இரண்டாவது கல்யாணம் யாரோடு எப்போது என்பதில் ஆரம்பித்து மூத்த மருமகன் தனுஷ் நிறுவனமான ஒண்டர்பார் விவகாரம், ரஜினிமக்கள் மன்ற விவகாரங்கள் வரை  ரஜினி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பு எப்படி வெளியே கசிகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ரஜினியும், அவர் குடும்பத்தாரும் கடும் மனஉளைச்சலில் இருந்தனர்.Rajinikanth

காரணம், ரஜினி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து திரும்பிய பின்னர் அவர் எங்கே போனாலும் கூடவே உதவிக்கு பலர் இருக்கிறார்கள். அதோடு, அவரது செய்திகளை வெளியே சொல்லவும் உதவியாளர்களை வைத்திருக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு தகவல் சொல்லவும் ஒரு உதவியாளரை வைத்திருக்கிறார். ஓட்டுனர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பல ஆண்டுகளாக ரஜினி குடும்பத்தில் பணி செய்து வருகிறவர்கள். ஆன்மீகத்தில் ரஜினி அதிக ஈடுபாடு காட்டினாலும் உதவியாளர்கள் விஷயத்தில் மதம் பார்க்காமல் கூடவே கிறிஸ்தவ, இஸ்லாமிய உதவியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்.

அவர்கள் எல்லாரும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள் என்று இதுவரை நம்பி வந்த ரஜினிக்கு சமீபத்திய பல தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கொடுத்திருக்கிறதாம். தனது வீட்டில் பேசப்படும் குடும்ப விஷயங்கள் கூட மீடியாக்களில் வெளியாகி பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம் ரஜினிக்கு.Rajinikanth

ரஜினியின் அரசியல் பிரவேச விஷயத்தை மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் ரஜினிமக்கள் மன்றம் சார்பில் வேட்பாளர்கள் தேர்வு என்று சில விவரங்கள் மீடியாக்களில் வெளியானதை பார்த்ததும் ரஜினி உச்சபட்ச கோபம் அடைந்திருக்கிறார்.

ஏற்கனவே, தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் வெளியாவதால் கடும் எரிச்சலில் இருந்த ரஜினிக்கு தனது மக்கள் மன்ற விவகாரங்களும் மீடியாக்களில் வெளியாவதை பார்த்து எரிச்சலில் உச்சத்திற்கே போய் இதுபோன்ற தகவல்கள் எப்படி வெளியே போகிறது என்பதை கண்டுபிடிக்க சின்ன மருமகன் விசாகனிடம் தனி அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறாராம்.Rajinikanth

தனுஷ் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் சின்ன மருமகன் விசாகனிடம் ‘வீட்டில் இருந்து தகவல்களை வெளியில் சொல்லும் கருப்பு ஆடு யார்’ என்பதை கண்டுபிடிக்கும் பணியை ஒப்படைத்ததிருக்கிறாராம் ரஜினி.
பல மாதங்களாக சந்தேக வளையத்தில் இருக்கிற சிலரை இளைய மருமகன் விசாகன் கண்டுபிடித்து விட்டார் என்றும் ஆதாரத்தோடு மாமனார் ரஜினியிடம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தர்பார் படப்பிடிப்பை மும்பையில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் முதல் வேலையாக தனது வீட்டில் விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டு ‘கருப்பு ஆடு’ வேலை பார்க்கும் நபரை ரஜினி கண்டுபிடித்து வெளியே துரத்துவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.