ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டிய பிரபல அரசியல்வாதி!

 

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டிய பிரபல அரசியல்வாதி!

சென்னையில் சமீப நாட்களாக தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலை தொடங்கியுள்ளது

சென்னையில் சமீப நாட்களாக தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலை தொடங்கியுள்ளது. அன்றாட பொது மக்கள் ஒரு குடம் தண்ணீர்க்காக காலி குடத்தோடு காத்து இருக்கும் சூழல் நிலவிவருகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் குறை கூறாமல், ரஜினி மக்கள் மன்றத்தினர் கடந்த சில நாட்களாக தங்களால் முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

rajini

வெளியூரிலிருந்து தங்களுடைய சொந்தக்காசை செலவு செய்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சென்னை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். தினமும் ஆளுக்கு ஒரு லாரி தண்ணீர் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்றத்தினர் சென்னை சிட்லபாக்கம் ஏரியை தங்களது சொந்த முயற்சியால் தூர்வாரி வருகின்றனர். அவர்களின் சேவையைப் பார்த்து, பழம்பெரும் அரசியல்வாதி நல்லக்கண்ணு அவர்கள் நேரில் சென்று அவர்களைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில், ‘தாய்ப்பால் போல் சுத்த அரசியல் செய்யும் நல்ல கண்ணு ஐயாவே வந்து வாழ்த்தியது, ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, ரஜினி சாருக்கே பெருமை தான்!! வாழ்க உங்கள் சமூகத் தொண்டு’ என்று கூறியுள்ளார்.