ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு ? திமுக எம்எல்ஏ ட்வீட்டும் ஹெச்.ராஜாவின் பதிலும்…!
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் ரஜினி மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, ‘பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டது’ என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் ரஜினி மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு ? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார்..
வரலாறு தெரியாமல் ரஜினிகாந்த் பேசக்கூடாது..
குருமூர்த்தி சொல்லி கொடுத்து ரஜினி பேசியிருப்பார்..#Rajinikanth #DMK #துக்ளக் #thuglak
Full video : https://t.co/ksinhI7dKT pic.twitter.com/O85QPFAq0x
— J Anbazhagan (@JAnbazhagan) January 18, 2020
இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்எல்ஏ அன்பழகன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு ? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார்..வரலாறு தெரியாமல் ரஜினிகாந்த் பேசக்கூடாது..குருமூர்த்தி சொல்லி கொடுத்து ரஜினி பேசியிருப்பார்..’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்து பெண்கள் மறுமண சட்டம் வந்தது 1856 – ல், ஆனால் ஈவேரா பிறந்ததோ 1879 – ல் அப்படியிருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள். https://t.co/I7BxJJctRD
— H Raja (@HRajaBJP) January 19, 2020
இதைக்கண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, ‘இந்து பெண்கள் மறுமண சட்டம் வந்தது 1856 – ல், ஆனால் ஈவேரா பிறந்ததோ 1879 – ல் அப்படியிருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.