ரஜினி ‘திருப்பதி வெங்கடாஜலபதி’ ; விஜய் ‘அத்தி வரதர்’ : சீமான் பேச்சு!

 

ரஜினி ‘திருப்பதி வெங்கடாஜலபதி’ ; விஜய் ‘அத்தி வரதர்’ : சீமான் பேச்சு!

ரஜினியுடனான அரசியல் சண்டை தொடங்கிவிட்டது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம்: ரஜினியுடனான அரசியல் சண்டை தொடங்கிவிட்டது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

seeman

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக களம் கண்டு வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினிகாந்த்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், மக்கள் மத்தியில் அத்தி வரதரை  நினைவுபடுத்திப் பேசினார். அதில்,  சினிமாவில் ரஜினியை, விஜய் வீழ்த்தியது போல திருப்பதி வெங்கடாஜலபதியை அத்தி வரதர் வீழ்த்தி விட்டார் என்று நகைப்புடன் பேசிய அவர் தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கந்தசாமி படம் பாணியில் ஊர் ஊராக கோயில்பட்டி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி, பணம் வசூல் செய்வோம் என்றார்.

rajini

ரஜினி அரசியலுக்கு வரத் தயாராகி விட்டார். அதனால் அவருடனான அரசியல் சண்டையும்  தொடங்கிவிட்டது என்று தெரிவித்தார்.